யே ஹி ஸந்ஸ்ப1ர்ஶஜா போ4கா3 து3:க2:யோனய ஏவ தே1 |
ஆத்யன்த1வன்த1: கௌன்தே1ய ந தே1ஷு ரமதே1 பு3த4: ||22||
யே—--எது; ஹி--—உண்மையாக; ஸந்ஸ்பர்ஶ-ஜாஹா----இந்த்ரியப் பொருட்களுடன் தொடர்பு கொண்டு பிறந்த; போகஹா—--இன்பங்கள்; துஹ்க—--துன்பம்; யோனயஹ—--ஆதாரம்; ஏவ—-உண்மையாக; தே—--அவைகள்; ஆத்ய-அந்தவந்தஹ---ஆரம்பமும் முடிவும் கொண்டவை; கௌந்தேய--—குந்தியின் மகன் அர்ஜுனா; ந—ஒருபோதும்; தேஷு—அவற்றில்; ரமதே---மகிழ்ச்சி அடைவார் (ந ரமதே—மகிழ்ச்சி அடைய மாட்டான்); புதஹ----ஞானமுள்ளவர்
BG 5.22: இந்த்ரியப் பொருட்களுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள், உலக எண்ணம் கொண்டவர்களுக்கு இன்பமாகத் தோன்றினாலும், உண்மையில் துன்பத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. குந்தியின் மகனே, இத்தகைய இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் உண்டு, அதனால் ஞானிகள் அவற்றில் மகிழ்ச்சியடைவதில்லை.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
புலன்கள் புலபொருட்களுடன் தொடர்பு கொண்டு இன்ப உணர்வுகளை உருவாக்குகின்றன. ஆறாவது அறிவைப் போன்ற மனம், கெளரவம், பாராட்டு, சூழ்நிலைகள், வெற்றி மற்றும் பிற அருவங்களிலிருந்து இன்பம் பெறுகிறது. உடல் மற்றும் மனதின் இந்த இன்பங்கள் அனைத்தும் போக் (பொருள் இன்பம்) எனப்படும். இத்தகைய உலக இன்பங்கள் பின்வரும் காரணங்களுக்காக ஆன்மாவை திருப்திப்படுத்த முடியாது:
உலக இன்பங்கள் வரையறுக்கப்பட்டவை, எனவே, குறைபாடு உணர்வு அவற்றில் இயல்பாகவே உள்ளது. 10 கோடி சொத்து உடைய ஒரு கோடீஸ்வரர் 100 கோடி வைத்திருக்கும் மற்றொரு கோடீஸ்வரரை பார்த்து அதிருப்தி அடைந்து, 'எனக்கும் ஒரு 100 கோடி இருந்தால், நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்.' என்று நினைக்கிறார். இதற்கு மாறாக, கடவுளின் பேரின்பம் எல்லையற்றது, அதனால்தான். முழு திருப்தி அளிக்கிறது
உலக இன்பங்கள் தற்காலிகமானவை. அவைகள் முடிந்தவுடன், அவைகள் மீண்டும் ஒருவரை துன்ப உணர்வோடு விட்டு விடுகிறது. உதாரணமாக, ஒரு குடிகாரன் இரவில் மது அருந்துவதில் மகிழ்ச்சி அடைகிறான், ஆனால் மறுநாள் காலையில், மது அருந்தியதால் உண்டாகிய தொக்கிய விளைவு அவருக்கு தலைவலியை உண்டாக்குகிறது. இருப்பினும், கடவுளின் பேரின்பம் நிரந்தரமானது, மற்றும் ஒருமுறை அடைந்து விட்ட பிறகு, என்றென்றும் நிலைத்திருக்கும்.
உலக இன்பங்கள் நிலையற்றவை, விரைவில் தீர்ந்துவிடும். ஒரு புதிய அகாடமி விருது பெற்ற திரைப்படத்தைப் பார்க்கும் போது, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள், ஆனால் அதே படத்தை வேறு ஒருவருடன் அவர்கள் படத்தை இரண்டாவது முறையாகப் பார்க்க நேர்ந்தால், அவர்களின் மகிழ்ச்சி வற்றுகிறது. இரண்டாவது நண்பர் மூன்றாவது முறையாகப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தினால், 'எனக்கு எந்த தண்டனையும் கொடுங்கள், ஆனால் அந்தப் படத்தை மீண்டும் பார்க்கச் சொல்லாதீர்கள்.' என்று கூறுகிறார்கள். நாம் அந்த பொருள்களினால் அடையும் மகிழ்ச்சி குறைந்து கொண்டே போகிறது. ஆனால் கடவுளின் பேரின்பம் எப்போதும் புதியது; அது ஸத்-சித்-ஆனந்த் (நித்தியமான, எப்போதும் புதுமையான, தெய்வீக ஆனந்தம்). எனவே, நாம் நாள் முழுவதும் கடவுளின் அதே தெய்வீக நாமத்தை ஜபித்து, அதில் நிரந்தரமான திருப்தியை அனுபவிக்க முடியும்.
ருசியான இனிப்பை அனுபவிக்கும் விவேகமுள்ள எந்த ஒரு மனிதனும் அதை விட்டுவிட்டு சேறு சாப்பிடத் தயாராக இருக்க மாட்டான். அதுபோலவே, ஒருவர் தெய்வீக இன்பத்தை அனுபவிக்கத் தொடங்கும் போது, மனம் பொருள் இன்பங்களின் மீதான அனைத்து சுவையையும் இழக்கிறது. பாகுபாட்டின் திறன் கொண்டவர்கள், மேலே குறிப்பிடப்பட்ட பொருள் இன்பங்களின் குறைபாடுகளைப் புரிந்துகொண்டு, அவற்றிலிருந்து தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். இதை ஸ்ரீ கிருஷ்ணர் அடுத்த வசனத்தில் வலியுறுத்துகிறார்.